இந்தியா – பாகிஸ்தான் நாடுகளும் தற்போது போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு கவுன்சிலின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு இ-மெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மைதானம் உடனடியாக காலி செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு செயலிழப்பு குழு, மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விரிவான விசாரணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் 2ஆவது முறையாக இந்த மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.