16 ஆம் திகதி ஐபிஎல் மீண்டும் ஆரம்பிக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவியது. இதனால், 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இன்னும் 12 லீக் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஒவ் சுற்று என மொத்தம் 16 போட்டிகளை நடத்த வேண்டி உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியை மீண்டும் தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி ஐ.பி.எல். நிர்வாக குழு உறுப்பினர்களும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, கடந்த 9-ஆம் திகதி லக்னோவில் நடைபெற இருந்த பெங்களூரு – லக்னோ போட்டியில் இருந்து தொடர் தொடங்கும் எனவும், வருகிற 16 அல்லது 17-ஆம் திகதி போட்டி தொடர் மீண்டும் தொடங்கி விடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அணி வீரர்களை திரும்ப அழைக்கும்படி 10 அணி நிர்வாகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிக்கான அட்டவணை இன்று அவர்களிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், மீதமுள்ள போட்டிகள் அனேகமாக 3 இடங்களில் நடத்தப்படும். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் நடத்தும் இடத்தில் (ஐதராபாத்) மாற்றம் இல்லை. ஆனால் இறுதிப்போட்டியை கொல்கத்தா ஈடன்கார்டனில் நடத்துவதில் சிக்கல் உள்ளது. புதிய அட்டவணைப்படி மே.31 அல்லது ஜூன்.1-மே் திகதி இறுதிப்போட்டி நடக்க வாய்ப்புள்ளது.

அந்த சமயத்தில் கொல்கத்தாவில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த