வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் அந்தப் பகுதியில் இடம்பெற்றதுடன், அங்கு கண்காணிப்பு விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை, இந்த வெந்நீர் ஊற்றுகளை சுற்றியுள்ள பகுதிகள் முறையாக அபிவிருத்தி செய்யப்படாத காரணத்தால், அங்கு செல்வதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம், அதன் சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப திறன் போன்று, அதன் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெந்நீர் ஊற்றுகளைச் சுற்றியுள்ள பகுதியில் வனப்பகுதியை அதிகரித்தல், தீவை அழகுபடுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலகுபடுத்தும் வகையில் நிலப்பகுதியிலிருந்து தீவு வரை பாலம் அமைத்தல் போன்ற விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத், வெலிகந்த பிரதேச சபைத் தவிசாளர் டி. டபிள்யூ. வசந்த, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் நிலத்தடி நீரியல் நிபுணர் தர்ம குணவர்தன ஆகியோருடன் Clean Sri Lanka செயலகம், இலங்கை மகாவலி அதிகாரசபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வெலிகந்த பிரதேச செயலகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக