விசாரணையின் போது மற்றுமொரு இளைஞர் மரணம்!

அம்பலாங்கொடை – கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர், நேற்று முன்தினம் கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞர், காவல்நிலையத்தில் சுகவீனம் காரணமாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்தார்.

இருப்பினும், குறித்த இளைஞனின் பெற்றோர் தங்கள் மகன் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொஸ்கொட காவல்துறையினரிடம் வினவியபோது, குறித்த இளைஞன் அறையில் இருந்த போது மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த