வாகன விபத்தில் பலருக்கும் காயம்!

பிராம்ப்டனில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் உயிருக்கு போராடிய சாரதி ஒருவர் உட்பட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை பிற்பகல் கொலரைன் டிரைவ் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​​குறித்த விபத்து தொடர்பான விசாரணையில் வெள்ளை வணிக வேனை இயக்கிய சாரதியே காரணம் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் வந்தபோது, ​​குறித்த வெள்ளை வணிக வேன் சந்தியில் பல வாகனங்களுடன் மோதியதைக் கண்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் வயது ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு பயணியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வேனின் சாரதி காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு குறிப்பிடத்தக்க காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,