வன்னியில் மு.கா. உறுப்பினர்கள் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வன்னி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நேற்று (10) கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

முசலி, மாந்தை மேற்கு, மன்னார், வெண்கலச்செட்டிகுளம் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், மன்னார் நகர சபை, முல்லைத்தீவு பிரதேச சபை ஆகியவற்றிற்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், வவுனியா மாநகர சபைக்கு இலங்கை தொழிலாளர் கட்சியின் கங்காரு சின்னத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒன்பது உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.

மன்னார் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் யாப்புச் சீர்திருத்தப் பணிப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த