யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 24ம் திகதி  வியாழக்கிழமை  அன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி – தம்பாலை பகுதியை சேர்ந்த அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

download

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில்

unnamed (Custom)

மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி!

நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு