முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 2021 ஆம் ஆண்டில் தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கில் கைது செய்யப்படுவதைத் தடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிதாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, திங்கட்கிழமை (19) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தனது சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.