மரபுகளைப் பேணுவதால் மட்டுமே எமது இருப்பு உறுதிசெய்யப்படும்!

எமது வாழ்வியலின் கூறுகளான கலை, கலாசார, பண்பாட்டு மரபுகளைப் பேணுவதும், அவற்றின் தனித்துவம் குறையாது அடுத்த சந்ததியிடம் கையளிப்பதுமே எமது இருப்பை உறுதிசெய்யும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 85ஆம் ஆண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள், அண்மையில் நிலைய கலையரங்கில் விழாக்குழுத் தலைவர் மஞ்சுளா புஸ்பராசா தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,

இருப்பழிந்துவரும் எமது சமூக மற்றும் வாழ்வியல் அடையாளங்களை மீள் நினைவூட்டும் வகையிலான கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதன் மூலம், இளைய சமுதாயத்தினரிடம் எமது மரபியல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அத்தகைய சமூகநிலைப்பட்ட சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கக்கூடிய அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தினரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

சமூக நிறுவனங்களே ஒரு சமூகத்திற்கு அடையாளம் தரவல்லன என்ற அடிப்படையில் அராலி மண்ணின் அடையாளமாக உருவாகி, 85 ஆண்டுகளைக் கடந்தும் தன் செயல்நோக்கில் தளராது இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் சமூகப் பணிகள் காலப்பெறுமதி மிக்கவை என்றார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த