மனைவிக்கு சமையல் தெரியவில்லை – விவாகரத்து கோரும் வௌிநாட்டு மாப்பிள்ளை!

யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்ய தெரியவில்லையனகூறி , வெளிநாட்டு மாப்பிள்ளை விவகாரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் மாவிட்டபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட, டென்மார்க் வாழ் நபரே விவகாரத்து கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதியுடன் , டென்மார் வாழ் 41 வயதான நபருக்கு இந்த வருட ஆரம்பத்தில் திருமணமானதாக கூறப்படுகின்றது.

41 வயதான மாப்பிள்ளை டென்மார்க் சென்று, மனைவியை அங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முன் மனைவி குடும்பத்தினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

மனைவியை பிரியாணி தயாரிக்குமாறு கூறிய நிலையில், மனைவி தயாரித்த பிரியாணியை சாப்பிடவே முடியவில்லையென்றும், பிரியாணி சமைக்க தெரியாத மனைவியை டென்மார்க் அழைத்து செல்வது தனக்கு வெட்கம் என்றும் குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் டென்மார்க் சென்ற பின்னர், மனைவி குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து தற்போது, சட்டத்தரணி ஒருவர் மூலம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி நபர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், அந்த திருமணத்தையும் 6 மாதங்களில் முறித்துக் கொண்டதாகவும், பெண் தரப்பினர் கூறியதாகவும் கூறப்படுகின்றது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க