மதுபோதையில் வாகனம் ஓட்டிய பொலிஸ் அதிகாரி கைது!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, காவன்திஸ்ஸ பாடசாலைக்கு அருகில், கடந்த 16 ஆம் திகதி, மதுபோதையில் வாகனம் செலுத்தியற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை பிரிவு போக்குவரத்து அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்