மதுபானம் மற்றும் பெருமளவு ஏலாக்காய் கடத்திய நால்வர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (06) அதிகாலை சுமார் ரூ.15 மில்லியன் மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்ற நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்த குறித்த நபர்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாலை 1:00 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் எடுத்துச் சென்ற 20 பொருட்களுக்குள் 378 மதுபான போத்தல்கள் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காயை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க சுங்க பிரிவு அதிகாரிகள் அந்த நபர்களை தடுத்து நிறுத்தி, சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,