பொலிஸார் குவிந்ததால் அச்சம் அடைந்த மக்கள்!

கனடாவின் தண்டர்பேயின் வடக்குப் பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஒரு சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுத சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் வடக்கு கம்பர்லேண்ட் வீதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக தண்டர் பே பொலிஸார் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபருடன் இருந்த மற்றுமொருவர் அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெள்ளிக்கிழமை இரவு காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு அதிகளவான பொலிஸார் துப்பாக்கிகளுடன் சென்ற நிலையில் அங்குள்ள கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. அங்கிருந்த மக்கள் அச்சத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் தமக்கு இன்னும் அறிவிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக