புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

புஷ்கர் – காயத்ரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் புஷ்கர் – காயத்ரி இணை படம் இயக்கவில்லை. இதனால், இவர்களுடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இடையே ‘சுழல்’ வெப் சீரிஸ் தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.

தற்போது தங்களது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘மதராஸி’, சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படங்களைத் தொடர்ந்து ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,