பிறந்து 2 நாட்களான சிசுவை விற்க முயற்சி – தாய்க்கு 7 வருட கடுழிய சிறை!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக 20 ஆயிரம் ரூபா அபராதமும், அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் 6 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் தனது கணவருடன் இணைந்து கருக்கலைப்பு நிலையம் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயும் அவரது கணவரும் கருக்கலைப்பு செய்வதற்காக அந்நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவரை கருக்கலைப்பு செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்து பணத்திற்கு விற்பனை செய்ய தூண்டியுள்ளனர்.

அந்த பெண், குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மூன்று பிள்ளைகளின் தாய், பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 7 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் முழு மனித இனத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

point

பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை!

பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு