பாப்பரசரின் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியை நீக்கியது இஸ்ரேல்!

கத்தோலிக்க திருச்சபை தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ( 21) நித்திய இளைப்பாறினார்.

இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரகம் நீக்கியுள்ளது.

“பாப்பரசர் பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்” என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளமை கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை.

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் இஸ்ரேல் – காஸா போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த