பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர்!

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது.

மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை காணமுடியும்.

ஆனால் தொழில்முறை கிரிக்கெட் விளையாடும் வீரர்களால் அவ்வாறு கையடக்க தொலைபேசிகளை வைத்துக்கொண்டு விளையாட முடியாது.

இந்நிலையில், ​​கவுண்டி கிரிக்கெட்டில் ஓட்டம் எடுக்க ஓடும்போது ஒரு துடுப்பாட்ட வீரரின் பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற லங்காஷயர்-குளூசெஸ்டர்ஷயர் போட்டியின் போது நடந்தது. லங்காஷயர் வீரர் டாம் பெய்லி ஓட்டங்கள் எடுக்க முயன்றபோது அவரது பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் மைதானத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் போட்டியின் 114வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. இதை முதலில் கவனிப்பவர்கள் வர்ணனையாளர்கள்தான். “அவரது பாக்கெட்டிலிருந்து ஏதோ விழுந்துவிட்டது, அது ஒரு மொபைல் போன் போல் தெரிகிறது” என்று ஒரு வர்ணனையாளர் கூறினார்.

மற்றொரு வர்ணனையாளர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். இந்தப் போட்டியில் பெய்லி 31 பந்துகளில் 22 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க