இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், G7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தன.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தின.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.