பஸ் கட்டணம் குறையாது!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த நேரத்தில் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. விலைச் சூத்திரம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நாங்கள் செயல்படவில்லை.

எனவே, இந்த நேரத்தில் நாங்கள் கட்டணங்களைக் குறைப்போம் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. அப்படிக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.

ஜூலை மாதம் நடைபெறும் ஆண்டுதோறும் பேருந்து கட்டண திருத்தத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். இந்த மாதம் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறு இல்லை.”

எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல என்றும், மற்ற அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்து கட்டணங்களை மாற்றியமைக்க, டீசல் விலையை 25-30 ரூபாவால் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், இந்த ஆண்டு மே தினக் கூட்டங்களுக்கு எந்தப் பேருந்துகளும் கோரப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த