பல மில்லியன்கள் வாகன மோசடி – சூத்திரதாரியை பிடிக்கு பொதுமக்கள் உதவி கோரப்படுகிறது!

பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பல போலி பெயர்களைப் பயன்படுத்தி ஏராளமான குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அவர் பல மொழிகளைப் பேசக்கூடியவர் என்றும், அவர் ஓட்டும் வாகனங்களில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை காட்சிப்படுத்தியபடி சுற்றித் திரிகிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

சந்தேக நபரின் பெயர் ரபீக் முகமது பாரிஸ், தேசிய அடையாள அட்டை எண் 761850466v மற்றும் பிறந்த திகதி 1976. 07.03 என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி: 0718591735, புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி: 0718596507

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்