பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதத்துக்குள் நீக்கப்படும் – அமைச்சர் உறுதி!

” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

‘ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில் ஐரோப்பிய வரிச்சலுகையானது நாட்டுக்கு பலமாக அமைந்துள்ளது. எனவே, அதனை நாம் தக்க வைக்க வேண்டும்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகின்றது. சுற்றாடல், தொழில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. எமது தரப்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தினாலும், வலியுறுத்தாவிட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிச்சயம் நாம் நீக்குவோம். அதுதான் எமது கொள்கை. இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு நாளை கூடவுள்ளது.

நாம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய சட்டத்தை நிறைவேற்றி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்.” – எனவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு