பங்களாதேஷில் தேர்தலுக்கான காலக்கெடு அறிவிப்பு!

பங்களாதேஷில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை இடைப்பட்ட காலத்தில், எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.

பங்களாதேஷில் புதிய தேர்தல்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026ம் ஆண்டு ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்தார்.

அவர், டோக்கியோவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக, முகமது யூனுஸ் பேசியதாவது: பங்களாதேஷில் அரசு தேர்தல் மற்றும் நிர்வாக சீர்திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிவடையும். இந்த சீர்திருத்தங்களின் வேகத்தைப் பொறுத்து பங்களாதேஷில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஜூன் வரை, இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம்.

தேர்தல்கள் நடக்கும்போது, ​​ தேர்தல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைப்போம். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொறுமையற்றவர்களாக இருப்பதால், தேர்தல்கள் எப்போது என்று அவர்களிடம் சொல்ல மக்கள் வலியுறுத்துகிறார்கள். மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த