நுவரெலியாவில் காற்றுடன் கூடிய மழையினால் போக்குவரத்து பாதிப்பு!

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

நேற்று (10) இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையில் நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்த்துள்ளது.

இதனால் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. அதேபோல நோட்டன், மஸ்கெலியா பிரதான வீதியின் இரண்டாம் கட்டைப்பகுதியிலும் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவி வருகின்றமையினால் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதுடன், வீதிகள் வழுக்கும் தன்மை காரணமாக சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

images (11)

தேசபந்துவின் துர்நடத்தை தொடர்பாக மேலும் நால்வர் சாட்சி!

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்