நல்லூர் கோவில் வளாகத்தில் அசைவ உணவகம்?

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று (20) மாலை 4.30 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று மாலை போராட்டம்

நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகள் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தன் கோவில் அருகே அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளமையானது நல்லூரான் பக்தர்களை கவலைகொள்ளச்செய்துள்ளது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்