தென் மாகாணத்தில் 457 பேர் கைது!

தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ​​பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 457 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.

பொலிசார், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் சுமார் 1500 பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, ​​மொத்தம் 3,288 நபர்களும் 1,365 வாகனங்களும் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடியாணை பிறப்பிக்கப்படவிருந்த 65 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 66 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் மாகாணத்தில் உள்ள மூன்று பொலிஸ் பிரிவுகளில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக