திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கட்சியின் மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இம்முறை நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டுருந்தனர்.

இதில் திருகோணமலை மாநகர சபையின் மேயராக தமிழ் அரசு கட்சியை சார்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த