கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தன்னுடை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
அவரை காப்பாற்றும் முயற்சியில் மக்கள் ஈடுபட்ட போதும் அது கைகொடுக்காத நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.
குறித்த நபரை பின்னர் பொலிஸார் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.