சமீபகாலமாக, மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு முக்கிய விஷயத்தை ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குறைந்த கலோரி கொண்ட செயற்கை இனிப்புகள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடை பராமரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டன. இந்த செயற்கை இனிப்புகளின் ஆபத்துகள் குறித்து பல்வேறு ஆய்வுகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் , உலக சுகாதார மையத்தின் இன்டர்நேஷனல் ஏஜன்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் (IARC) நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கை இனிப்பான அஸ்பார்டேம் ‘மனிதர்களுக்கு சாத்தியமான புற்றுநோயை உண்டாக்கக்கூடியது ‘ என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதய ஆரோக்கியம் குறித்து ஒரு புதிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.