கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு ஜூன் 16!

கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 16­ ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை ஆணையர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில், புதிய மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பது முதல் பணியாக இருக்கும்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, கொழும்பு மாநகரை சபையில் எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த