கொட்டாஞ்சேனை மாணவியின் பெற்றோரை சந்தித்தார் பிரதமர்!

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், விசாரணையை மேற்கொண்ட பொலிஸாருடன், நேற்று (10) பிரதமர் அலுவலகத்தில் விரிவான கலந்துரையாடலுக்காக பிரதமரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாரபட்சமற்ற விசாரணை

இந்தக் கூட்டத்தின் போது, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக கூறப்படும் பாடசாலை மற்றும் கல்வி வகுப்பில் நடந்ததாகக் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் திறம்பட பின்பற்றப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சகம் தற்போது ஒரு உள் விசாரணையை நடத்தி வருகிறது.

அத்துடன், இதுபோன்ற வழக்குகளைக் கையாள பொறுப்பான அரசு நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, ஆலோசகர் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு