கொட்டாஞ்சேனை சிறுமி விவகாரத்தில் – பிரதமர் தலையீடு

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு இன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, முறையான மற்றும் மிக விரைவான விசாரணையை நடத்துமாறு பிரதமர் பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் பதிவாகியது முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றனவா என்பது குறித்து கல்வி அமைச்சின் மூலம் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் இவர்களிடம் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் குறித்து தலையிட வேண்டிய அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்றும், துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைக்கு நேர்மறையான பதில் வழங்கப்படுவதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளமையினால், இந்த பொறிமுறையை கண்காணித்து, அதை நெறிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பிரதமரினால் நியமிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோர் கலந்துகொண்டனர்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு