கொச்சி அருகே கடலில் மூழ்கியது சரக்கு கப்பல்!

கேரள மாநிலம் கொச்சி அருகே லைபீரியா நாட்டு கொடியுடன் கூடிய 184 மீட்டர் நீளமுள்ள MSC ELSA 3 என்ற சரக்கு கப்பல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து மே 23 ஆம் தேதி புறப்பட்ட இந்த கப்பல், மே 24 ஆம் தேதி கொச்சியை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொச்சிக்கு தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, மதியம் சுமார் 1:25 மணியளவில் கப்பலில் 26 டிகிரி சாய்வு ஏற்பட்டதாக கப்பல் மேலாண்மை நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு அவசர தகவல் அளித்தது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய இந்திய கடலோர காவல்படை, மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல்படையின் கப்பல்களும், இந்திய கடற்படையின் ஒரு கப்பலும் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. மேலும், அப்பகுதி முழுவதும் விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் இதுவரை 9 பேர் உயிர் காக்கும் படகுகளில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 மாலுமிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக விமானங்கள் கூடுதல் உயிர் காக்கும் படகுகளை கப்பலுக்கு அருகில் வீசியுள்ளன. இந்த விபத்து குறித்து அறிந்ததும், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DG Shipping), இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து, கப்பலை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கப்பல் மேலாண்மை நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு