காஸா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணயக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் இராணுவம் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றும் (23) இஸ்ரேல் இராணுவம் காஸா மீது தாக்குதலில் ஈடுபட்டது. காஸாவின் ராபா பகுதியை நோக்கி குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதி கட்டிடங்கள் தீப்பிடித்து இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.