கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் ஆவணமற்ற குடியேற்றவாசிகள் உட்பட பலர் சுற்றிவளைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரை அனுப்புவது அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும் கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசன் உட்பட அவரது எதிர்ப்பாளர்கள் இந்த நடவடிக்கை பதற்றங்களை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு படையினரை அனுப்பும் உத்தரவை ரத்து செய்யுமாறு நியூசன் விடுத்த கோரிக்கையையும் வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருவதால் போராட்டம் வெடித்தது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த