கறிவேப்பிலை பறிக்கச் சென்ற தாய் கட்டுத்துவக்கு வெடித்ததில் பலி!

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவின் ரொட்டவெவ காட்டுப்பகுதியில் நேற்று (8) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எப்பாவல, ரொட்டவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட, 55 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று ரொட்டவெவ காட்டுப் பகுதிக்கு கறிவேப்பிலை பறிப்பதற்காக சென்றிருந்தபோது கட்டுத்துவக்கு வெடிப்பில் சிக்கி காயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.  உயிரிழந்த பெண்ணின் சடலம் எப்பாவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த