கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பு – கனடா முன்னாயத்த நடவடிக்கையில்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவிற்கான ஏற்றுமதிகளுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்த நிலையில், இதற்கான எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து கனடிய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வரி விதிப்பு எதிர்வரும் முதலாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பாதிக்கப்படக்கூடிய தரப்புகளுக்கு நிவாரணங்களை வழங்குவதை கனடிய மத்திய அரசு பரிசீலித்து வருகின்றது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு ஒப்பாகவே, இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாக கனடிய அரசு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், கனடாவின் குடிவரவு கொள்கைகள் குறித்து ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகள் கனடா வழியாக அமெரிக்காவில் பிரவேசிக்கின்றனர் என்றும், கனடா அதை தடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த