கண்டி மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு!

கண்டி மாவட்டத்தில் டெங்கு வேகமாக பரவி வருவதாகவும், மிகத் தீவிரமாகப் பரவும் பிரதேசங்களில் ஒன்றாக பெயரிடக்கூடிய நிலையை கண்டி அண்மித்துள்ளதாக சமூக சுகாதார வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுரங்க பிரனாந்து தெரிவித்தார்.

கண்டி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒரு பிரதேசத்தில் வாரத்துக்கு 100க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளர்கள் என இனங்காணப்பட்டால் அப்பிரதேசம் தீவிரமாக டெங்கு பரவும் பிரதேசமாக சுகாதார வைத்திய அதிகாரியால் அடையாளப்படுத்தப்படும்.

அந்த அடிப்படையில் தற்போது கண்டியும் அத்தகைய இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மே மாதம் இதுவரை கண்டி மாவட்டத்தில் 340 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது மேற்படி இலக்கை அண்மித்த தொகையாகும்.

யட்டிநுவர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் கண்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு என்பவற்றிலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதே நேரம் கடந்த வாரத்தில் மட்டும் கண்டி மாவட்டத்தில் 116 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, எந்த அடிப்படையில் பார்த்தாலும் கண்டி தீவிர டெங்கு அபாய வலயமாக மாறிவருகிறது என்றார்.

மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவர் காணி விவசாய கமநல சேவைகள் அமைச்சர் லால்காந்த தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு