கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பாளர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் அமைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“நாம் ஸ்ரீலங்கா” என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த மற்றொரு அமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும், மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு