நோ அதர் லேண்ட்’ என்ற பலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாலை இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
தற்போது இஸ்ரேல் இராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் இராணுவம்,
“நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.