ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் பிரதமர் இடையில் சந்திப்பு!

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் அவர்களை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

சமூகப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நல்லிணக்கம் போன்ற முக்கிய துறைகளில் இலங்கையின் முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஐ.நா.வின் தொடர்ச்சியான ஆதரவை ஃபிரான்ச் மீண்டும் வலியுறுத்தினார்.

2025 ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

காசா பகுதியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து பிரதமர் கவலை தெரிவித்ததுடன், பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஈடுபாடு மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்