ஐந்து மாதங்களில் 5 தொன் போதைப்பொருள் பறிமுதல்!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 5 தொன்களை கடந்த 5 மாதங்களில் கைப்பற்ற முடிந்துள்ளது எனபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது நூறு வீத முன்னேற்றமாகும். நாட்டுக்கு கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கைப்பற்றும் விடயத்தில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கைக்குள் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் பாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். குறித்த போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்காகவும் விற்பனை நோக்கத்துக்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் அதிகமானவை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகளவிலான கடத்தல்கள் இந்த நாடுகளில் இடம்பெறுகின்றன.இலங்கைக்குள் பயன்பாட்டுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,