இந்திய அணியின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய ஜடேஜா, “எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் தான். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திரசிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் டோனி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
டோனியை பற்றி ஒரே வார்த்தையில் விவரிக்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று ஜடேஜாவிடம் அஷ்வின் கேள்வி எழுப்பியதற்கு “அவரது மகத்துவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் அனைவருக்கும் மேலாக நிற்கிறார்” என்று ஜடேஜா பதிலளித்துள்ளார்.