இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம் – ஈரான் எச்சரிக்கை!

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.

ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த