இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் கிராமமட்ட சங்கங்களின் வருடாந்த மீளாய்வு கூட்டம்!

காவேரி கலா மன்றத்தின் வழிகாட்டலில் இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் கிராமமட்ட சங்கங்களின் வருடாந்த மீளாய்வு கூட்டமானது 23ம் திகதியும் 24ம் திகதியும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் 22 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் 2024ஆம் ஆண்டு தனது சங்கங்களின் செயற்பாட்டு மீளாய்வும், 2025 தொடக்கம் 2026 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாட்டு விடயங்களும் குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு திட்ட அறிக்கைகளும் திட்ட முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. மேலும் மாவட்டமட்ட சங்கங்களின் மாநாட்டுக்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கம் தேசிய மட்டத்தில் இலங்கை முழுவதும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக மாவட்ட மற்றும் கிராமமட்ட செயற்குழுக்களை அமைத்து அவர்களின் தேவைகளுக்காக சேவைகளை வழங்கி வருகின்றது.

உலக சுகாதார நிறுவனம் தொழில்நுயாளர் சங்கங்களின் வினைத்திறனான செயற்பாடுகளால் மட்டுமே தொழுநோய் பரவுவது கட்டுப்பாட்டுக்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை வலியுறுத்தி வருகின்றது. இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் இலங்கை தொழுநோயாளர் சங்கம் தேசிய மற்றும் மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் ஏனைய சுகாதார மற்றும் சமூக சேவை அமைப்புகளிட இணைந்து செயலாற்றி வருகின்றது இதன் அடிப்படையில் கிராமம் மட்ட தொழு நோயாளர் மறுவாழ்வு சங்கங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு