இலங்கையின் 53வது குடியரசு தினம் இன்று!

இலங்கை இன்று (மே 22) தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1972ஆம் ஆண்டு மே 22 அன்று, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பு, , பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், இலங்கை முழு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுபட்டு, குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1815இல் கண்டியன் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரிட்டிஷ் பேரரசுடன் இணைக்கப்பட்டு, அதன் இறையாண்மை பிரிட்டிஷ் மன்னரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டது. 1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும், அது ஒரு டொமினியன் நாடாகவே இருந்தது.

ஆனால், 1972இல், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, இலங்கையை முழுமையான குடியரசாக மாற்றியது.

இந்த நாள் இலங்கையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. குடியரசு தினம், நாட்டின் முழு சுதந்திரத்தையும், தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க