இலங்கையின் மின் கட்டணம் குறித்து ஐஎம்எப் விடுத்திருக்கும் அறிவிப்பு!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 4ஆம் மதிப்பாய்வு தொடர்பான பணியாளர்கள் மட்ட உடன்படிக்கையானது, மின்சார கிரய மீட்பு அடிப்படையிலான விலையிடல் மற்றும் முறையான சுய மின்சார விலை முகாமைத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் தலைமையதிகாரி இவான் பாபஜோர்ஜியோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மின்சாரக் கட்டணம் சரி செய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரி செலுத்துவோர் மீது மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கை மின்சார சபை இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாயின், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் தலைமையதிகாரி இவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க