நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கள் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும் அடங்குவதுடன் காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து சம்பவத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.