இந்திய பிரதமரின் ரஷ்ய பயணம் இரத்து!

ஜேர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 – 1945 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜேர்மன் படைகள் சரணடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ரஷ்யாவில் வருகின்ற மே 9 ஆம் திகதி 80 ஆம் ஆண்டு வெற்றி விழா நடைபெறவுள்ளது. இந்த வெற்றி விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ரஷ்ய வெற்றி நாள் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதியில் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.

தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரஷ்யப் பயணத்தை மோடி தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை