இந்தியா – அமெரிக்கா இடையே 10 ஆண்டு இராணுவ ஒப்பந்தம்!

இந்தியா – அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான இராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “இரு நாட்டு இராணுவ அமைச்சர்களும் அடுத்த சில மாதங்களில் நேரடி சந்திப்பு நடத்த உள்ளனர்.

அப்போது, அடுத்த 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். தெற்காசியாவில், அமெரிக்காவின் முதன்மையான இராணுவ கூட்டாளி இந்தியா என அமைச்சர் ஹெக்சேத் கூறினார்.

பெப்ரவரியில் இடம்பெற்ற , அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்யும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் இராணுவ தளவாட விற்பனை, இராணுவ தொழில் ஒத்துழைப்பின் கட்டாய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,