பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையல் பலுசிஸ்தான் விடுதலைப் படையின் செய்தித்தொடர்பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகையில்,
‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு எதிராக 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது.
சமீபத்திய இந்த தாக்குதல் 51-க்கும் மேற்பட்ட இடங்களில் பல மணி நேரம் நீடித்தது. எதிரியை அழிப்பது மட்டுமே இந்த தாக்குதலின் நோக்கமல்ல. தற்காப்பு நிலைகள் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்” என்றார்.
இந்தியாவின் ஆதரவை நாங்கள் பெற்றால் இந்த தீவிரவாத அரசை (பாகிஸ்தானை) பலூச் தேசத்தால் ஒழிக்க முடியும். இது, அமைதியான, வளமான மற்றும் சுதந்திர பலுசிஸ்தான் உருவாக வழி வகுக்கும் என்று பலுசிஸ்தான் விடுதலைப் படை கூறியுள்ளது.